நாளை பதவி விலகுகின்றார் மகிந்த ! உறுதிப்படுத்திய நாமல் ! ஏன் அப்பாச்சி இது உனக்கு தேவையா ?

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளியாகிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

நாளைய தினம் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நாளையதினம் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். அதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளார்” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: