நைஜீரியாவில் 12 படையினர் பலி

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில், இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த நைஜீரியப் படையினரில், ஆகக்குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் எனவும், இன்னும் பலர் காணாமற்போயுள்ளனர் எனவும், அந்நாட்டு இராணுவத் தரப்புகள் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலுக்குப் பதிலடி வழங்கும் விதமாக, மீண்டுமொரு தாக்குதலை இராணுவம் நடத்தியதெனவும், அதன்போது, படைவீரரொருவர் கொல்லப்பட்டதோடு, இன்னுமொருவர் காயமடைந்தார் எனவும், இராணுவம் தெரிவித்தது.

நைஜீரியப் படையினருக்கு அண்மைக்காலத்தில் கிடைத்த, மோசமான இழப்பாக இது காணப்படுகிறது.

-tamilmirror.lk