இராணுவ முகாம் முன்பாக அணிதிரண்ட தமிழ் மக்கள்; காரணம் இதுதான்!

கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக அப் பிரதேசத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று (31) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவமே கேப்பாபுலவு மண்ணிலிருந்து உடனடியாக வெளியேறு என்ற பிரதான பதாகையைச் சுமந்தவாறு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாடத்தில் இடுபட்டுள்ள மக்களை அச்சுறுத்தும்வகையில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-athirvu.in

TAGS: