வடக்கில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் மக்களின் காணிகள்; இராணுவம் அறிவிப்பு!

வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் பொது மக்களிடம் கையளிக்கப்பட உள்ளதுடன், யாழில் 46 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

-athirvu.in

TAGS: