முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த சிங்கள நீதிமன்றம்!

முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த இருவருக்கு தலா 25 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ படையணியின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் உட்பட 8 பேரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

குறித்த இருவரும் ஒப்புக்கொண்ட 5 குற்றங்களில் ஒரு குற்றத்திற்கு தலா 5 ஆண்டுகள் வீதம், விதிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனையை, 5 ஆண்டுகளில் நிறைவுசெய்வதாக வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் தெரிவித்துள்ளார்.

மேலும் 2007 ஆம் ஆண்டில், வில்பத்து சரணாலயத்தில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: