பகாங் சுல்தான் புதிய பேரரசர்

பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அஹமட் ஷா நாட்டின் 16வது பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்தானா நெகாராவுக்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

“ஆட்சியாளர் மன்றம் முடிவு செய்து விட்டது. பகாங் ஆட்சியாளர்தான் அடுத்த பேரரசர்”, என்று உயர் இடத்தில் உள்ள ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

சுல்தான் அப்துல்லா,59, ஜனவரி 12-இல் அவரின் தந்தை சுல்தான் அஹமட் ஷாவுக்குப் பதிலாக பகாங் ஆட்சியாளராக முடிசூட்டப்பட்டார்.

சுல்தான் அஹமட், 88, கோலாலும்பூர் இருதய சிகிச்சைக் கழகத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா துணைப் பேரரசராக தொடர்ந்து இருப்பார் என்றும் அவ்வட்டாரம் கூறிற்று.