மன்னாரில் கடலோரத்தை முற்றுகையிட்ட பொலிஸார்; சிக்கிய வெடிகுண்டுகள்!

மன்னார், பேசாலை – நடுக்குடா கடலோரப் பகுதியில் ஒரு தொகை வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை சிலிக்கனைட் குச்சிகள், கிளைமோர் சுரங்கங்கள், ரப்பர் பூட்ஸ், ரொக்கெட் ஏவுதல்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெடிபொருட்களை நடுக்குடா கடற்கரையோரத்திலிருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-athirvu.in

TAGS: