மனோகரன் மீது பழி போட வேண்டாம், அம்பிகா கூறுகிறார்

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் எம். மனோகரனின் தோல்விக்கு அவர் மீது பழி போட வேண்டாம் என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன் கூறுகிறார்.

தேர்தல் முடிவிற்கு அந்த டிஎபிக்காரரை குறைகூறக்கூடாது. அவர் அந்தத் தொகுதியில் பல ஆண்டுகளாக உழைத்து வந்துள்ளார்.

அவர் அத்தொகுதியில் எவ்வித ஆரவாரமுமின்றி ஓராங் அஸ்லிகளுடன் உழைத்து வந்துள்ளார். பல தோட்டத் தொழிலாளர்களின் வழக்குகளை இலவசமாக நடத்தி அவர்களுக்கு உதவியுள்ளார். தோல்விக்கு அவர்மீது பழி போட வேண்டாம் இன்று மதியம் டிவிட் செய்துள்ளார்.

தேர்தல் நியமன நாளுக்கு முன்னதாகக்கூட அவர் குறைகூறல்களுக்கு ஆளானார்.

ஆனால், அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்று தேர்தல் கண்காணிப்புக் குழு பெர்சே கூறுகிறது.

நேற்று, தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸ்ஹார் அஸிசான் ஹருண் வேட்பாளர் மனோகரனுக்கு எதிராகப் போஸில் புகார் செய்துள்ளார்.