தமிழர்களை ஒன்றினைத்தது சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வு

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈந்த எமது தேசத்தின் செல்வங்களை வணங்கும் தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் கடந்த 27-ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது.

இதேபோன்று, மாவீரர் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகளோடு சுவிஸ் Forum Fribourg மண்டபத்தில் வரலாறு காணாத மக்கள் நிறைந்திருக்க எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் காலத்தின் தேவை கருதி தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 2007, 2008-ம் ஆண்டுகளில் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

(PIC : TAMILWIN)