இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் முன்வரைவு தயார்!

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகளால் எதிர்வரும் 20ஆம் திகதியன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதற்க்கான தீர்மான முன்வரைவு “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் ஜெனிவாவிலுள்ள பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் நேற்றைய தினம் சுற்றோட்டத்துக்கு விடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த வரைவில் 2021 மார்ச் மாதம் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த வரைவில் 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

-eelamnews.co.uk

TAGS: