நந்திக் கொடியுடன் செம்மணியில் சிவலிங்கம்! சைவ மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்!!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சிவலிங்கம் ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் உள்ள யாழ். வளைவுக்கு அதாவது ஏ9 விதிக்கு அருகாமையில் குறித்த சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள வெற்றுக் காணியொன்றில் சுமார் ஐந்து அடிகள் மண்ணை உயர்த்தி பெரிய சிவலிங்கமொன்று வைக்கப்பட்டு நந்திக்கொடியொன்றும் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த சிவலிங்கம் யாரால் எதற்காக வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மகா சிவராத்திரி வரவுள்ள நிலையிலேயே வைக்கப்பட்டிருக்குன்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை வீதியால் செல்கின்றவர்கள் பலரும் பார்வையிட்டுக் கொண்டு செல்வதும் குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk

TAGS: