எம்எச் 370 : தேடும் பணி கைவிடப்படவில்லை

2014 மார்ச் 8-இல் காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் படலம் கைவிடப்படாது.

புதிய சான்றுகள் கிடைத்தால் காணாமல்போன விமானத்தைத் தேடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிக்கை கூறியது.

அவ்விபத்தில் உறவுகளைப் பறிகொடுத்த குடும்பத்தார் மனம் தளர்ந்து விடக்கூடாது என்றும் அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது.

“அவர்களுக்காகவே என்றென்றும் வேண்டுவோம், பிரார்த்தனை செய்வோம். 2014, மார்ச் 8 மறக்க முடியாத ஒரு நாள்”, என்று அது கூறியது.

2014 மார்ச், 8-இல் 239 பேருடன் பெய்ஜிங் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த எம்எச்370 திடீரென்று காணாமல் போனது.