பிரபாகரனின் புகைப்படம் வைந்திருந்ததாக மாணவன் ஒருவர் மட்டக்களப்பில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தைத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பில் மாணவர் ஒருவரை காவல்துறையினர் நேற்றுக் கைது செய்தனர்.

மட்டக்களப்பு அரசடித்தீவைச் சேர்ந்த குறித்த மாணவன் இவ்வாண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எழுதியவராவார். நேற்று மாலை மட்டக்களப்புக் காத்தான்குடிப் பகுதிக்குச் சென்ற வேளையில் பிரபாகரனின் புகைப்படத்தை கைத்தொலைபேசியில் பதிவேற்றி வைந்திருந்ததற்காக குறித்த மாணவனைக் காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அம்மாணவன் காவல்துறையினரால் இன்றைய நாள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஐர்செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.