போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும் – பிரித்தானியா!

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள், போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை குறித்த 40/1 என்ற பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இதன்போது உரையாற்றிய போதே பிரித்தானிய பிரதிநிதி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் துன்பறுத்தல்கள் போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும்.

இதனை இலங்கை அரசு மிகவும் வேகமாக நிறைவேற்ற வேண்டும்“ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: