பிரான்சுக்கு செல்ல முயன்ற தமிழர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வகையில், பெண் ஒருவர், இரு சிறுவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி அனுர இந்திரஜித் புத்ததாச நேற்று மாலை உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரகசியமாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து நேற்று மதியம் வாகனத்தில் உடப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இவர்கள் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்விடயத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

-athirvu.in

TAGS: