தமிழர் தாயக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழியே ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வேண்டும். இதுவே உலக தமிழர்களின் விருப்பம்

உலக தமிழினம் பாதுகாப்பாக இருக்க, தமிழக மக்கள் துயரின்றி வளமாக வாழ, தமிழருக்கென்று தனித்த அரசியல் அதிகாரம் நிறுவ, தமிழக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழிவழியே ஆண்ட பரம்பரை மீண்டும் அதே அறத்துடனும் வீரத்துடனும் ஆள வேண்டும். அதற்கு அடித்தளம் அமைத்திருக்கும் அனைத்து உயிருக்குமான அரசியலை முன்னெடுக்கும் தமிழக நாம் தமிழர் கட்சி சமரசமின்றி தனித்து நின்று வருகிற ஏப்ரல் 18-ம் திகதி நடைபெறவுள்ள 40 இந்திய பாராளுமன்றம் மற்றும் 19 சட்டமன்ற இடைத்தேர்தலும் “விவசாயி” சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே உலக தமிழர்களின் வேட்கை என மலேசிய நாம் தமிழர் இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக தமிழர் மண்ணை ஆரிய திராவிட நயவஞ்சக பேர்வழிகள் ஆள விட்டதால், தமிழர் தாயகத்தின் இயற்கை வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு, தமிழர்கள் உரிமை உடமைகளை இழந்து சாதிக்கும் மதத்திற்கும் மதுவிற்கும் இலவசத்திற்கும் அடிமையானதுதான் மிச்சம்.

உலகிற்கே அன்னமிட்ட தமிழர் தாய் நிலத்தை அழிக்க மீத்தேன், நியூட்ரோ, செதெர்லைட், கெயில் எரிவாயு, அய்ட்ரோ கார்பன், பெட்ரோ கெமிக்கல், கூடங்குளம் அணுவுலை போன்ற இம்மண்ணை மடலாக்கும் எண்ணற்ற தீய அபாயகர திட்டங்களை கையெழுத்திட்டு வரவேற்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி ஆற்று நீர் உரிமை, நீட் தேர்வு, விவசாயி கடன், மீனவர் பாதிப்பு போன்ற எண்ணிலடங்கா வாழ்வுரிமை போராட்டங்களுக்காக தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கப்பட வைத்தனர்.

செம்மொழி தமிழாய்வு மையத்தை முடக்கியது, ஆர்வர்ட் பல்கலைக்கழக தமிழர் இருக்கை அமைய இடையூறு செய்தது, தமிழரின் வரலாற்று அடையாளமான கீழடியை மூடியது, வெள்ளம், காசா புயல், யோகி புயல் போன்ற இயற்கை பேரிடரால் தமிழகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உரிய நிவாரணத்தை தட்டி கேட்டு பெற முடியாத கையாலாகாத அரசாகத்தான் இருந்தது.

இவை அனைத்தையும் விட தமிழர் இரண்டாவது தாயக மண்ணான தமிழ் ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகளை சிங்கள இனவெறிக்கு காவ கொடுத்து அமைதி காத்தது, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொன்றதற்கு கேள்வி எழுப்பாதது, சிங்கள கடற்படையினரால் 850 மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நீதியை கேட்காது, சல்லிக்கட்டு போராட்டத்தில் தானே கலவரம் தூண்டி மாணவர்களை அடித்தது, தமிழக கூலி தொழிலாளியை நிர்வாணமாக்கி கன்னட வனத்துறை அதிகாரிகள் அடித்தது, காவிரி சிக்கலில் தமிழக கனரக ஓட்டுனர்கள் மற்றும் அங்கு வசிக்கும் தமிழர்களை அடித்தது, தமிழக பெண்ணை கேரளா இளைஞர்கள் கலங்கப்படுத்தியது, தூத்துக்குடி துப்பாக்கிச் சுட்டுக் படுகொலை, ஆளும்கட்சி அதிகாரத்தில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் போன்ற இன்னும் எத்தனையோ கொடுமைகளை உலக தமிழர்கள் மறந்து விட மாட்டார்கள் என்றார் திரு பாலமுருகன்.

ஆகவே, தமிழக தமிழர்களுக்கு ஒரே கடைசி வாய்பாக ஓட்டுரிமை வழி நமது இனம், மொழி, பண்பாடு, நாடு மீட்சி பெற தமிழாய்ந்த தமிழர்கள் தான் தமிழர் மண்ணை ஆள வேண்டும். உலகையே ஆண்ட பரம்பரை கொண்ட தமிழர்கள் தற்போது தமிழர் மாநில மண்ணையாவது ஆள தமிழக மக்கள் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும், நம்மிலிருந்து வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து நாளைய தலைமுறை பிள்ளைகள் நல்வாழ்வுக்காக விருப்பு வெறுப்பின்றி தமிழர் தேசிய இன மகனாய் உழைக்க வேண்டும். அதற்கு உலக தமிழர்கள் அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டும். அவ்வரிசையில்  மலேசிய தமிழர்கள் சார்பில் சில முன்னெடுப்புகளை செய்து வருவதையும் உலக தமிழர் பாதுகாப்பு செயலக பொறுப்பாளருமான திரு பாலமுருகன் வீராசாமி கூறினார்.