பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதி

தான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேலின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வலதுசாரி கொள்கையை கொண்ட நெதன்யாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதமானவையாக இருந்தபோதிலும், இஸ்ரேல் அந்த கருத்துடன் முரண்படுகிறது

வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள குடியேற்றங்களில் சுமார் நான்கு லட்சம் யூதர்களும், 25 லட்சம் பாலத்தீனியர்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil