வட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள்? சர்ச்சையை கிளம்பியுள்ள விமலரத்ன தேரர்!

வட மாகாணத்தில் தமிழ் பேசும் பௌத்தர்கள் 37 ஆயிரம் பேர் காணப்படுவதாக தான் மேற்கொண்ட தேடல் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சர்வதேச பௌத்த மையத்தின் சிங்கள பௌத்த நட்புறவுத் திட்டத்தின் துணைத் தலைவர் லக்சேகம ஸ்ரீ விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்துக்கு தலையிடுமாறும் தேரர் கேட்டுள்ளார்.

இவர்களுக்கு சிங்கள மொழி அறிவு மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், இதனைக் கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: