’தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரன் அல்ல’

தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்லவெனத் தெரிவித்த  தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அதற்கு அப்போதைய அரசியல் தலைமைகளே காரணமெனவும் குற்றஞ்சாட்டினார்.

கிளிநொச்சியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், பிரபாகரன் நல்லெதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவரெனவும் கீழ் உள்ளவர்கள் செய்த தவறுகள் அத்தனையையும்தான் மேல் பாட்டுக்கொண்டு, அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டாரெனவும் தெரிவித்தார்.

உண்மையில் சிறந்த தலைமைத்துவ பண்பை பிரபாகரன் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணமானவர் அல்லவெனவும் அன்றிருந்த அரசியல் தலைவர்களு முழுக்க முழுக்க காரணமெனவும் கூறினார்.

-tamilmirror.lk

TAGS: