சாய்ந்த மருதுவில் மோதல் முஸ்லீம் ஜிகாடிகள் தாக்கியதில் ராணுவம் பலி ?

முன்னதாக சாய்ந்த மருதுவில் உள்ள முஸ்லீம் ஜிகாடி முகம் ஒன்றை இலங்கை ராணுவத்தின் கைப்பற்றி இருந்தார்கள். ஆனால் அந்த வேளை சிறிய எதிர்ப்பே காணப்பட்டது. ஆனால் முகாமை அவர்கள் கைப்பற்றிய பின்னர் வீடியோ எடுத்து அதனை ஊடகங்களுக்கு அவர்கள் அனுப்பிக்கொண்டு இருக்க, திடீரென அங்கே வந்த ஜிகாடிப் படையினர் சற்றும் எதிர்பாராமல் கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்கள். இதுவரை 11 இலங்கை ராணுவம் கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் கொழும்பில் உள்ள அனைத்து ஊடகங்களும் இதனை மூடி மறைக்கிறது. கடந்த ஞாயிறு தொடக்கமே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் முதல் கொண்டு இன்றைய செய்திகள் வரை பலவற்றை கொழும்பில் உள்ள ஊடகங்கள் பிரசுரிக்கவில்லை. பிரசுரித்தால் சிங்கள காடையர்கள் புறப்பட்டுச் சென்று முஸ்லீம்களை வெட்டிச் சாய்ப்பது நிச்சயம். இதனை தவிர்க்கவே சிங்கள ஊடகங்கள் இவ்வாறு செய்கிறது.

ஆனால் இலங்கை அடுத்த ஆக்பானிஸ்தானாக மாறியுள்ளது. அமெரிக்க எப்.பி.ஐ இலங்கை சென்றுள்ள அதேவேளை இஸ்ரேலின் மொசாட் பிரிவும் இன்று மாலை கொழும்பு சென்றுள்ளது என அறியப்படுகிறது. அனைத்து வெளிநாட்டு உளவுப் பிரிவுகளும் தற்போது இலங்கையில் நிலை கொண்டுள்ளது.

5 பேர் சாய்ந்த மருதுவில் இறந்துள்ளதாகவும், இன்று இரவு பலத்த துப்பாக்கி சத்தங்கள் கேட்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஊடகவியலாளர்கள் செல்ல அங்கே தடை விதிக்கப்பட்டுள்ளதோடு. எந்த ஒரு தகவலையும் பரிமாற ராணுவம் மறுத்து வருகிறது.

-athirvu.in

TAGS: