தமிழர் பகுதியில் வாழும் முஸ்லிம்களின் கிராமங்களை சுற்றிவளைத்த ஸ்ரீலங்கா படை!

முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களான முள்ளிவளை ஹிஜ்சிராபுரம் மற்றும் முல்லைத்தீவு உண்ணாப்புலவு வரையான பகுதிகளில் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது வீட்டிலுள்ள உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதில் புல்மோட்டையினை சேர்ந்த நபர் ஒருவர் ஹிஜ்சிராபுரத்தில் தங்கி இருந்த வேளை அவரை படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், அதே கிராமத்தில் மற்றும் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

-athirvu.in

TAGS: