பணி ஓய்வு பெறும் பூஸி பொறுப்புகளை ஹமிட்டிடம் ஒப்படைத்தார்

இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் பணியிலிருந்து ஓய்வுபெறும் முகம்மட் பூஸி ஹருன், தேசிய போலீஸ் படைத் தலைவர் பொறுப்புகளை அப்துல் ஹமிட் படோரிடம் இன்று ஒப்படைத்தார்.

உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் முன்னிலையில் பொறுப்புகளை- ஒப்படைக்கும் நிகழ்வு நடந்தது.

போலீஸ் சிறப்பு படை முன்னாள் இயக்குனரான அப்துல் ஹமிட் இரண்டாண்டு ஒப்பந்தத்தில் ஐஜிபி-ஆக நியமிக்கப்படுகிறார். அவரது பதவிக்காலம் நாளையிலிருந்து தொடங்குகிறது.