பாக்கிஸ்தான் அகதிகளுக்கு வன்னியில் தங்க அனுமதி- குடியமர்த்தப்பட்டார்கள்

பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடியமர்த்தியுள்ளாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளை வன்னி மாவட்டத்தில் குடியேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த அகதிகளைப் பொறுத்தவரையில் இந்த அகதிகள் பாகிஸ்தான் நாட்டில் பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்திருக்கின்றது.

அவர்கள் ஓரினச் சேர்க்கை சம்பந்தமானவர்கள் என்பதையும் நாங்கள் ஊடகங்களுடாகவும் குற்றப்புலனாய்வூடாகவும் அறிந்து கொண்டிருக்கின்றோம் என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளதோடு. தமது கண்டனத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். ஆகவே இவ்வாறானவர்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்தி இதனூடாக வன்னி மாவட்டத்தில் இன்று அமைதியான சூழலை சீர்குலைக்கப்பார்ப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். யுத்த காலத்தில் வன்னி மாவட்டத்திலிருந்து இந்தியாவிற்குச் சென்ற அகதிகள் இங்கு மீண்டும் வந்திருக்கின்றார்கள்.

அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் அல்லது அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் கூட சரியான முறையில் செய்துகொடுக்காத நிலையில் பிறிதொரு நாட்டிலுள்ள அகதிகளை இங்கு கொண்டு வந்து குடியமர்த்த முயற்சிப்பது அல்லது அவர்களைத் தங்க வைக்க முயற்சிப்பது ஒரு மோசமான விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

அகதிகளை இங்கு கொண்டு வந்தமை தொடர்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமாரிடம் வினவியபோது அவர் இது பற்றி எனக்குத் தெரியவே இல்லை என்று சொல்லிவிட்டார். மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் செய்திருக்கின்றாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.

-athirvu.in

TAGS: