டத்தோ ஸ்ரீ உணவக உரிமையாளரைத் தாக்குவது மறைகாணியில் பதிவானது, ஆனாலும் இன்னும் கைதாகவில்லை

முகநூல் பதிவு தொடர்பான சர்ச்சையில் “டத்தோஸ்ரீ” பட்டம் கொண்ட ஒரு வணிகரும் அவருடன் வந்த ஆடவர்களும் ஒரு உணவக உரிமையாளரைத் தாக்கிய சம்பவம் முழுக்க மறைகாணி(CCTV)யில் பதிவானது.

ஆனாலும், போலீஸ் இன்னும் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை என்று முறையிட்டுள்ளார் உணவக உரிமையாளர்.

அதற்குப் பதிலளித்த வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ரஜாப் அஹாட் இஸ்மாயில், நிறைய சாட்சிகளை விசாரிக்க வேண்டியிருப்பதால் இதில் அவசரப்படுவதற்கில்லை என்றார்.

“விரைவிலேயே அவரை(டத்தோ ஸ்ரீயை)க் கைது செய்வோம். விசாரணை அறிக்கை இறுதிசெய்யப்பட்டு வருகிறது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.