மக்கள் வேண்டுவதை விட நாட்டுக்கு தேவையானதை அரசியல்வாதிகள் வழங்க வேண்டும்! அமைச்சர் மனோ!

இந்த நாட்டில் மக்கள் வேண்டியதை அரசியல் தலைவர்கள் கொடுக்க முற்படுவதனாலேயே இனவாதம் தலைத்தோங்குகின்றது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மக்கள் வேண்டுவதை ஒரு புறம் வைத்து விட்டு, மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும், நாட்டுக்கும் மக்களின் எதிர்காலத்துக்கும் எது நல்லது என்பதை தீர்மானித்து வழிகாட்டுபவரே உண்மையான தலைவர் ஆவார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்றார்கள் என்பதற்காக அவற்றை நடைமுறைப்படுத்துவது ஒரு உண்மையான தலைவருடைய பண்பாக இருக்காது. மாறாக, அவர்கள் வேண்டினாலும், சிறந்ததை தீர்மானித்து ஆலோசனை வழங்குவதே தலைவரின் பணியாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

அரச தொலைக்காட்சியொன்றில் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

eelamnews.co.uk

TAGS: