முஸ்லீம் ஆளுநர்களின் பதவி விலகல் எதிரொலி; உண்ணாவிரதத்தை கைவிட்ட தேரர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்!

கடந்த நான்கு தினங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அத்துரலிய ரத்ன தேரர், தனது உண்ணா விரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் ஆகியோரை பதவி விலக்குமாறு கோரியே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

உண்ணாவிரத போராட்டத்தின் பிரதிபலிப்பாக சற்று முன்னர் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இதனையடுத்து அத்துரலிய ரத்ன தேரர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்ணாவிரதத்தை கைவிட்ட ரத்னதேரர் அம்புலன்ஸ்மூலம் கண்டி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ரத்னதேரர் உண்ணாவிரதத்தை கைவிட்ட தகவலை மத்தியமாகாண முதலமைச்சர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

-athirvu.in

TAGS: