பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பதவியேற்குமாறு அழைப்பு!

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீளவும் தமது அமைச்சுப் பதவியைப் பொறுப்பு ஏற்கவேண்டுமென கோரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொடு ஶ்ரீ ஞானரத்தன தேரரின் தலைமையில், இன்று பிற்பகல் 2 மணி யளவில் மகா சங்கத்தினர் கூடிநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் 15 விடயங்களின் கீழ் கலந்துரை யாடப்பட்டுள்ளது.

சில விடயங்கள் தொடர்பில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், ஒன்றிணைந்த அறிக்கையொன் றையும் மகா சங்கத்தினர் வௌியிடவுள்ளனர்.

இன்று எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில், மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட ஶ்ரீ விஜிதசிறி தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

சிங்களம், தமிழ் , முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற ஸ்திரமான தகவலை உறுதிப்படுத்துவதற்கே எதிர்பார்க்கின்றோம். அதுவே எமது கோரிக்கையாகும். தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியமை, இடம்பெற்று இருக்கக்கூடாத ஒரு விடயமாகும். அதனால் தங்களின் பொறுப்புக்களை ஏற்குமாறு குறித்த தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அந்த தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கான தீர்மானத்தையும் நாம் எடுத்துள்ளோம்.

அத்துடன், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருப்பின், தாம் சுற்றவாளிகள் என்பதை அரசுக்கும் பாதுகாப்பு பிரிவுக்கும் நிரூபியுங்கள். இந்த நிலைமையை நாம் புரிந்து செயற்படாவிடின், வௌியே இருந்து எமது நாட்டுக்கு அழுத்தங்கள் நிச்சயமாக விடுக்கப்படும். எமது நாட்டின் அமைதி சீர்குலைக்கப்பட்டு பாரிய அபாயத்தை நாம் எதிர்நோக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.

ரிஸாத் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி,மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய மூவரையும் பதவி விலக்கக் கோரி கண்டி தலதா மாளிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து நான்காவது நாட்கள் ஆன நிலையில் அரசாங்கத்தில் அமச்சுப்பதவிகளைப் பெற்றிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவிவிலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: