தீவிரவாதத்துக்கு எதிராக இந்து- பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்: அத்துரலிய தேரர்

தீவிரவாதத்துக்கு எதிராக இந்து மக்களும் பௌத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டில் இன்று, இந்து மற்றும் பௌத்த மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். பல இடங்களில் சத்திரசிகிச்சை என்ற பெயரில் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இந்து மற்றும் பௌத்த மக்கள் ஐக்கியப்படுவது நாட்டுக்கு அவசியமான ஒன்றாகும்.” என்றும் அத்துரலிய ரத்ன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: