தீர்வை வழக்கும் எண்ணம் மைத்திரிக்கு இல்லை; மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் எண்ணம் ஏதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகளினால் தமிழ் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஓரணியாக இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றிவருவதாலேயே, நாம் சர்வதேசத்தை நம்பியிருக்க வேண்டியி இருக்கின்றது.” என்றும் மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: