ஹிஸ்புல்லாஹ்வை வைத்து சஹ்ரான் சாதித்த காரியங்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன்

அம்பாறை காத்தான்குடியில் சஹ்ரான் இருந்துகொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அதிகாரங்களை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவை கட்டி எழுப்பியதாக மட்டு.விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் காதல் எனும் பெயரால் தமிழ்ப் பெண்களை கடத்தி சென்று தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதாகவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவசரகால சட்டத்தினால் வதைத்தால், தான் வீதிக்கு இறங்கி போராடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் இந்து குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நேற்று தேரரை சந்தித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிழக்கு ஆளுநர் மட்டுமன்றி சில சட்டத்தரணிகள், நீதவான்கள் போன்றோரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சிகள் இருப்பதாகவும் தேரர் கூறியுள்ளார்.

கிழக்கு “மூனா” க்களுக்கு தேரர் ஆப்பு வைக்காமல் விடமாட்டார் போல…

-athirvu.in

TAGS: