லண்டனில் உள்ள இந்த முஸ்லீம் குடும்பத்தினர் சிரியா சென்று கருகி இறந்த கதை…

லண்டன் லூட்டனில் வசித்து வந்த இந்த முஸ்லீம் குடும்பத்தினர். ஐ.எஸ் தீவிரவாதிகளோடு இணைய ஆசைப்பட்டு. லண்டனில் இருந்து சிரியா சென்றுள்ளார்கள். இக் குடும்பத்தில் 11 பேர் அடங்குவதாக லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதில் 5 வயது மற்றும் 2 வயது சிறுவர்களும் அடங்குகிறார்கள்.குறித்த குடும்பத்தினர், ஐ.எஸ் தீவிரவாதிகள் மேல், தீவிர காதல் கொண்டு இருந்துள்ளார்கள் என்றும்.

அதில் இணைந்து உலகிற்க்கு பெரும் சேவை செய்ய முற்பட்டுள்ளார்கள். (எப்படியான சேவை என்று நாம் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை).இன் நிலையில் இவர்கள் சாவு மிக மிக கொடூரமாக உள்ளதாக பொலிசார் கவலை வெளியிட்டுள்ளார்கள். சிரியாவில் இக் குடும்பத்தை சேர்ந்த சிலர் எரிந்து மாண்டுபோக. மீதமுள்ள சிலர் கடும் நோய்களுக்கு ஆளாகி, சரியான உணவு இன்றி பரிதவித்து இறந்துள்ளார்கள். பிரித்தானியா வந்து குடியேறி. அகதிகள் அந்தஸ்த்தைப் பெற்று, லூட்டனில் ஆடம்பரமான வீடு ஒன்றில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் எப்படி ஜிகாடி போதனைகளைக் கேட்டு மனம் மாறினார்கள் என்று தெரியவில்லை என்கிறது பிரித்தானியப் பொலிஸ் பிரிவு.

-athirvu.in

TAGS: