மகாதிர் முழுத் தவணைக் காலத்துக்கும் பிரதமராக இருப்பதையே சிலாங்கூர் பெர்சத்து விரும்புகிறது

சிலாங்கூர் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மகாதிர் முகம்மட் முழுத் தவணைக் காலத்துக்கும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“14வது நாடாளுமன்றம் முடிவுறும்வரை மகாதிர் பிரதமராக தொடர்ந்து இருப்பதை வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம்.

“இதைதான் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியும் அம்னோ, பாஸ் கட்சிகளும் தெரிவித்துள்ளனர்”, என பெர்சத்து குவாங் சட்டமன்ற உறுப்பினர் சலேஹுடின் அமிருடின் ஓர் அறிக்கையில் கூறினார்.

இது நாட்டின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் என்று சிலாங்கூர் பெர்சத்துவின் தகவல் தலைவருமான சலேஹுடின் கூறினார்.

14வது பொதுத் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதை அடுத்து மகாதிர் மலேசியாவைச் சரியான பாதையில் கொண்டுசெலுத்தி அனைத்துலக அளவில் நாட்டின் நன்மதிப்பை நிலைநிறுத்தியுள்ளார் என்றாரவர்.

சிலாங்கூரில் பெர்சத்துவுக்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 56 பேரைக் கொண்ட சட்டமன்றத்தில் ஹரப்பான் 50 இடங்களைக் கொண்டுள்ளது.