மகாதிர் கேட்டுக்கொண்டால்கூட எம்பி ஆக மாட்டேன் – ஷாஹிடான் சகோதரர்

பட்டம், பதவிகளில் ஆசையில்லாதவர் தம்பூன் தூலாங் சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம். பெர்லிஸ் மந்திரி புசார் பதவி அளித்தால்கூட வேண்டாம் என்கிறாரவர்.

பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷஹிடான் காசிமின் சகோதரரான இஸ்மாயில், பெர்சத்துவில் இணைந்தது பற்றி மலேசியாகினியிடம் விவரித்தார்.

“மீண்டும் மந்திரி புசார் வேட்பாளராகும் எண்ணம் எனக்கு இல்லை. அப்பதவி எனக்கு உரியது அல்ல.

“மகாதிரே கட்டாயப்படுத்தினால்கூட வேண்டாம் என்பேன்”, என்றாரவர்.

வடக்கத்தி மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்ற நடப்புப் பதவியே போதுமானது என்றவர் நினைக்கிறார்.

“சட்டமன்ற உறுப்பினராய் இருப்பதே போதும். இது மக்களுக்குச் சேவை செய்ய ஒரு வாய்ப்பு. அதுதான் முக்கியம்”, என்று இஸ்மாயில் கூறினார்.