லைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய சட்ட நடவடிக்கை: என்ஜிஓ-கள் ஆலோசனை

அரசாங்கம் குவாந்தான் , கோப்பெங்கில் லைனாஸ் நிறுவனத்துக்கு அரிய மண் எடுப்பதற்கு ஆறுமாதகால தற்காலிக அனுமதி கொடுப்பதைத் தடுத்து நிறுத்த அரசுசாரா அமைப்புகள் அடங்கிய ஒரு குழு திட்டமிடுகின்றது.

அக்குழுவின் வழக்குரைஞர் ஹொன் காய் பிங், தன் கட்சிக்காரர்கள் லைனாஸுக்கு அரசாங்கம் ஆறு-மாத லைசென்ஸ் வழங்குவதைச் சட்ட நடவடிக்கை மூலமாக தடுக்க நினைக்கிறார்கள் என்றார்.

“லைனாஸுக்கு லைசென்ஸ் வழங்குவதைத் தடுக்க நாங்கள் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறக் கூடும். இனிமேல்தான் இதை முடிவு செய்வோம்”, என்றாரவர்.

ஒரு மாதத்துக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றவர் எதிர்பார்க்கிறார்.