அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு- முஸ்டபா

முன்னாள் அமைச்சர் முஸ்டபா மீண்டும் அமைச்சராவார் என்று வதந்தி உலவுகிறது. அது குறித்து அவரிடமே கேட்டதற்குப் பதிலளிக்காமல் நழுவிய அவர், அதை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு என்றார்.

அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுவது பற்றியும் அவர் கருத்துரைக்க மறுத்தார்.

“அதெல்லாம் பிரதமரின் அதிகாரத்துக்கு உட்பட்டது”, என்று இன்று தேசிய பொருளாதார காங்கிரசில் கலந்துகொண்ட முஸ்டபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த வாரம் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் நிகழலாம் ஆனால் அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இராது என்று கூறியிருந்தார்.

முன்னாள் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்டபா மீண்டும் அமைச்சராகலாம் என்ற வதந்தியையும் மகாதிர் நிராகரித்தார்.

நீண்ட கால அம்னோ உறுப்பினரான முஸ்டபா கடந்த ஆண்டு அதிலிருந்து விலகி மகாதிரின் பிபிபிஎம் கட்சியில் இணைந்தார்.