தஞ்சோங் பியாய் தொகுதிக்கு டிஏபி உரிமை கொண்டாடாது

பெர்சத்து கட்சியிடமுள்ள தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியைத் திருப்பிக் கொடுக்குமாறு டிஏபி கேட்காது என்று அதன் தலைமைச் செயலாளர் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.

அங்கு இடைத் தேர்தலில் எந்தப் பக்கத்தான் கட்சி போட்டியிடப் போகிறது என்று அவரிடம் வினவியதற்கு “தஞ்சோங் பியாய்-க்கும் டிஏபி-க்கும் சம்பந்தமில்லை”, என்றவர் சொன்னார்.

இதனிடையே, தஞ்சோங் பியாய் தொகுதி அதற்கே கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளது பெர்சத்து.

அத்தொகுதியை மற்ற ஹரப்பான் கட்சிகளிடம் ஒப்படைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மாநில பெர்சத்து தலைவர் மஸ்லான் பூஜாங் கூறினார்.

“தஞ்சோங் பியாய் பெர்சத்துவுக்குத்தான் என்பது பக்கத்தான் பங்காளிக் கட்சிகள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒன்று”, என்றவர் நேற்று கூறியிருந்தார்.