காணாமல்போன மோகனாம்பாளைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுகிறது போலீஸ்

செப்டம்பர் 14-இல், ரவாங், பத்து ஆராங்கில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரின் மனைவியான ஜி.மோகனம்பாள் பற்றித் தகவல் அறிந்தவர்கள் போலீசுக்கு உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவார் என்பதால் அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் நோர் அஸாம் ஜாமாலுடின் தெரிவித்தார்.

“அவருடைய படத்தை வெளியிட வேண்டும் என்று ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவரைப் பற்றி அறிந்தவர்கள் தகவலளிக்க முன்வர வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.

மோகனாம்பாள் ரவாங் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மூவரில் ஒருவரான ஜனார்த்தனம் விஜயரத்தினத்தின் மனைவியாவார். சம்பவம் நடந்த நாளிலிருந்து அவரைக் காணவில்லை.