2013-இலிருந்து பயங்கரவாதிகளின் 25 திட்டங்களை போலீஸ் முறியடித்தது

2013-இலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் கிறிஸ்துவ, இந்து, பெளத்த வழிபாட்டு இல்லங்களையும் கேளிக்கை மையங்களையும் தாக்கும் 25 பயங்கரவாதத் திட்டங்களை போலீஸ் முறியடித்திருக்கிறது.

பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிடல், தாக்குதலுக்குப் பணம் திரட்ட முற்படல் உள்பட, பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள குற்றங்களுக்காக 74 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் படை, பயங்கரவாத-எதிர்ப்புப் பிரிவு தலைமை உதவி இயக்குனர் (இ8) ஆயுப் கான் மைடின் பிச்சை கூறினார்.

யுஎஸ்ஏ சுபாங் ஜெயா ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் பெரியதொரு தாக்குதல் மேற்கொள்வதும் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகளின் திட்டங்களில் ஒன்று என ஆயுப் கான் பெர்னாமாவிடம் கூறினார்.