மகாதிர்: பிஎன் எம்பிகளும் அஸ்மினும் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது

நேற்றிரவு பிஎன் எம்பிகளுக்கும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலிக்குமிடையிலான சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது தமக்குத் தெரியாது என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி வீட்டில் அப்படி ஒரு சந்திப்பு நிகழ்ததாக மற்றவர்கள் சொல்லித்தான் அவருக்கே தெரிய வந்ததாம்.

“அச்சந்திப்பு பற்றிக் கேள்விப்பட்டேன். என்ன பேசினார்கள் என்பதை நானறியேன்”, எனச் செய்தியாளர் கூட்டமொன்றில் பக்கத்தான் ஹரப்பான் தலைவருமான மகாதிர் தெரிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் முகைதின் யாசினைச் செய்தியாளர்கள் சந்தித்து கேட்டதற்கு ஊடகங்கள் மூலமாகத்தான அது பற்றித் தெரிந்து கொண்டதாக அவரும் கூறினார்.

“ஊடகங்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்.

“மற்றபடி உண்மையில் நடந்தது என்னவென்பது எனக்குத் தெரியாது”, என்றார்.