நேற்றைய சந்திப்பு குறித்து அஸ்மின் விளக்கமளிக்க வேண்டும்: அன்வார் வலியுறுத்து

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நேற்றிரவு பிஎன் எம்பிகள் மற்றும் பிகேஆர் எம்பிகளைச் சந்தித்துப் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

அச்சந்திப்பில் 22 பிஎன் எம்பிகளும் ஐந்து பிகேஆர் எம்பிகளும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

“நிச்சயமாக விளக்கம் கேட்போம். அது பல கேள்விகளை எழுப்புகிறது. எனவே, அவர் விளக்கம் அளிப்பதே முறையாகும்”, என அன்வார் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.