ஜோகூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அலவன்ஸ் இரட்டிப்பாக உயர்வு

ஜோகூரில் எல்லா மா நகராட்சி கவுன்சிலர்களுக்கும் ஜனவரியிலிருந்து அலவன்ஸ் தொகை ரிம900 -இலிருந்து ரிம1,800 ஆக உயர்த்தப்படுகிறது.

இதைத் தெரிவித்த ஜோகூர் மாநில ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டான் சென் சூன், முனிசிபல் கவுன்சிலர்களின் அலவன்ஸ் ரிம800-இலிருந்து ரிம1,300 ஆகவும் மாவட்ட கவுன்சிலர்களின் அலவன்ஸ் ரிம600-இலிருந்து ரிம1,000-ஆகவும் உயர்கிறது என்றார்.

ஊராட்சி மன்றங்களின் சேவைகள் மேம்பட அவர்கள் ஆற்றிவரும் பணியை மதித்து அவர்களின் அலவன்ஸ் உயர்த்தப்படுவதாக டான் கூறினார்.