வன்முறையைக் காட்டி மிரட்டியவர்களுக்கு வெற்றி – ஜைட்

காஜாங்கில் இன்று நடைபெறவிருந்த தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநாட்டைத் தடுக்க போலீசார் நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றது குறித்து வருத்தம் கொள்கிறார் ஜைட் இப்ராகிம்.

“பிஎன் காலத்தில் போலீஸ் ஒரு சார்பாக நடந்துகொள்வார்கள். அது எனக்குத் தெரியும். இப்போது குழப்பம் விளைவிக்கும் கலகக்காரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.

“ஆனால், எதுவும் மாற்றம் கண்டிருப்பதாக தெரியவில்லை. பிரபலமாக நடந்தேறிய மலாய் காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு சீனர்களுக்குக் கிடைக்கவில்லை”, என்று முன்னாள் அமைச்சரான ஜைட் கூறினார்.