ஹூபேயில் சிக்கியுள்ள மலேசியர்கள்

ஹூபேயில் சிக்கியுள்ள மலேசிய குடிமக்களை மலேசியாவுக்கு திரும்பி வருவதை அனுமதிக்க புத்ராஜெயா சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

அவர்களை மீண்டும் கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது என்று அவர் இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.