சீனாவின் ஜெஜியாங்/Zhejiang மற்றும் ஜியாங்சு/Jiangsu பயணிகளுக்குத் தடை

சீனாவின் ஜெஜியாங்/Zhejiang மற்றும் ஜியாங்சு/Jiangsu பயணிகளுக்குத் தடை கட்டுப்பா

கொரோனா வைரஸ் | 805 உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸ் மையப்பகுதியான ஹூபே மாகாணத்திற்கு தற்போதுள்ள தடையைத் தவிர்த்து, சீனாவின் ஜெஜியாங் Zhejiang மற்றும் ஜியாங்சு Jiangsu மாகாணங்களிலிருந்து வரும் பயணிகளுக்கும் தற்காலிக பயணத் தடையை வெளியுறவு அமைச்சு விதித்திருக்கிறது.

துணைப் பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில், ஜனவரி 27 ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட மாகாணத்தை சீன அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ‘பூட்டப்படுவதாக’ அறிவித்தவுடன் அதன்மீது மலேசிய குடிவரவு அதிகாரிகள் பயண தடையை அமல்படுத்துவார்கள் என்ற முடிவுக்கு ஏற்ப இது அமைந்தது என்று கூறினார்.