மலேசிய பெண் கோவிட்-19ல் இருந்து குணமடைந்தார்

மலேசிய பெண் கோவிட்-19ல் இருந்து குணமடைந்தார்

கொரோனா வைரஸ் | 40 வயதான மலேசிய பெண் ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்ட சமீபத்திய நோயாளி ஆவார்.
இது மலேசியாவில் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 18ஆகக் கொண்டுவந்துள்ளது.

கோவிட் -19க்காக இன்னும் நான்கு நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் சீரான நிலையில் உள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தப் பெண் மலேசியாவில் கோவிட்-19 இன் 13வது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு ஆவார். பிப்ரவரி 5 ஆம் தேதி அவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கெடாவில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.