‘உறவை வலுப்படுத்தும் இந்திய பயணம்’: பிரதமர் மோடிக்கு டிரம்ப் நனறி

வாஷிங்டன்:இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தன் பயணம் அமைந்ததாக கூறியுள்ள, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவருடன் அவருடைய மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.பயணம் முடித்து நாடு திரும்பிய அவர் கூறியதாவது:பிரதமர் மோடி மிகச் சிறந்த மனிதர், மிகச் சிறந்த தலைவர். இந்தியா மிகவும் சிறந்த நாடு. இந்தியர்கள் மிகச் சிறந்த வரவேற்பை அளித்தனர்.அதனால், நாங்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளோம்.

இரு நாடு களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் பல விஷயங்கள், இந்தப் பயணத்தில் நடந்தன. இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்ய உள்ளோம். அவர்கள் கோடிக் கணக்கில் செலவிட உள்ளனர். ராணுவ ஒப்பந்தம் உட்பட பல துறைகளில், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு இந்தப் பயணம் உதவியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.’

அமெரிக்கா சர்வதேச வளர்ச்சி நிதி வாரியம் அமைப்பின் கிளை இந்தியாவில் அமைக்கப்பட உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். ‘இந்தியா, அமெரிக்கா இடையயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவு மேலும் பலப்பட உள்ளது’ என, டிரம்பின் மகள் இவாங்கா, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுஉள்ளார். டிரம்பின் மனைவி மெலனியாவும், சமூக வலை தளத்தில், தாஜ்மஹாலை சுற்றுப் பார்த்தது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்து, ‘வீடியோ’ வெளியிட்டுள்ளார்.

dinamalar