சரிகேய் எம்.பி. வோங் லிங் பியு கோவிட்-19 நோய்க்கு சாதகமாகி உள்ளார்

சரிகேய் எம்.பி.க்கு கோவிட்-19

சரிகேய் எம்.பி. வோங் லிங் பியு கோவிட்-19க்கு சாதகமாக உள்ளார் என்று பல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வோங், மார்ச் 7 ஆம் தேதி சிபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வோங் சோதனையில் உள்ள ஒரு நோயாளி என்று சரவாக் சுகாதார இயக்குனர் டாக்டர் சின் ஜின் ஹாங் கூறியதாக பெர்னாமா முன்னதாக மேற்கோள் காட்டியிருந்தது.

எவ்வாறாயினும், கோவிட் -19க்கு வோங் நேர்மறையானதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக டிஏபி வட்டாரங்கள் தெரிவித்தன.

பெயர் குறிப்பிட மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தொடர்பு சோதனைகளை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மார்ச் 1 ம் தேதி நடந்த கூட்டத்தில் வோங்குடன் அவர்கள் இருந்ததாக அந்த எம்.பி. தெரிவித்தார். மறுநாள் கோலாலம்பூரில் உள்ள புடுவிலும் அவர்கள் வோங்குடன் இருந்தனர். வோங் அன்று சிபுவிற்கு திரும்பினார்.
கோலாலம்பூரில் இருந்தபோது மற்றொரு எம்.பியும். வோங் மற்றும் ஒரு குடும்ப உறுப்பினருடன் அதே காரில் இருந்ததாக அறியப்படுகிறது.

பிப்ரவரி 29 முதல் கடந்த வாரம் வரை பல அரசியல் கூட்டங்களில் வோங் கலந்து கொண்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

இதுவரை சரவாக்கில் ஒன்பது கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.