கோவிட்-19: இறப்பு எண்ணிக்கை 10, மொத்த பாதிப்புகள் 1,306

நாட்டில், கோவிட்-19 இன் இறப்பு எண்ணிக்கை இப்போது 10 ஆக உள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் பினாங்கில் காலமான 74 வயதான ‘நோயாளி 259’, தப்லீக் கூட்டத்தில் கலந்து கொண்டவர் ஆவார்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 123 புதிய பாதிப்புகள் உள்ளன என்றும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 1,306 ஆக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

புதிய பாதிப்புகளில், 74 கடந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் நடந்த தப்லீக் கூட்டத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றன. மேலும் 49 பேர் வெவ்வேறு கூட்டங்களில் கலந்தவரிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.