மொத்தம் 14 இறப்புகள், 1,518 பாதிப்புகள்

கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் மேலும் 212 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 1,518 பாதிப்புகளாக அதிகரித்துள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 212 புதிய பாதிப்புகளில் 123 பாதிப்புகள் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங்கில் மசூதியின் தப்லீக் கூட்டம் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளன.

நான்கு புதிய இறப்புகளையும் அவர் அறிவித்தார். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை இப்போது 14 ஆக பதிவாகியுள்ளன.