நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிப்பு குறித்து சுகாதார அமைச்சு ஏப்ரல் 10ம் தேதி முடிவு செய்யும்

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தை ஏப்ரல் 15க்கு அப்பால் நீட்டிக்க வேண்டுமா என்று சுகாதார அமைச்சு ஏப்ரல் 10 அன்று முடிவு செய்யும்.

ஒரு நாளைக்கு பதிவுசெய்யப்படும் புதிய கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதா அல்லது உயர்கிறதா என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“கட்டுப்பாடை நீட்டிக்க வேண்டுமா இல்லையா என்பதை தரவு தான் நமக்கு தெரிவிக்க வேண்டும். நாம் அதை அறிவியல் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும்”.

“ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள், அதை நீட்டிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கான தரவு எங்களுக்குக் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று மாலை புத்ராஜெயாவில் அமைச்சின் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.